Sunday, November 14, 2010

HIDE AND SEEK


நிழலான இவ்வுலகில்
நீற்குமிழியான என் வாழ்வில்
வண்ணங்களாய் வந்து போகும்
உறவுகள் எத்தனையோ!

வதங்கி விழும் மலர்போல
வாசம் வீசும் வாழ்வதனில்
வந்து போகும் வருத்தங்கள் 
எத்தனை எத்தனையோ!!

சொந்தம் நூறு வந்தாலும்
சோர்வுமிகும் சோலைஇது
எந்த இடம் சேர்ந்தாலும்
ஏக்கம் மிகும் வாழ்க்கையிது!!!

நான் எதையோ தேட
நீ எனையே தேட 
இந்த கண்ணாமூச்சி விளையாட்டில்
கட்டப்பட்ட கண்கள் யாருடையவை?!?

1 comment:

  1. சொந்தம் நூறு வந்தாலும்
    சோர்வுமிகும் சோலைஇது
    எந்த இடம் சேர்ந்தாலும்
    ஏக்கம் மிகும் வாழ்க்கையிது!!!

    நான் எதையோ தேட
    நீ எனையே தேட
    இந்த கண்ணாமூச்சி விளையாட்டில்
    கட்டப்பட்ட கண்கள் யாருடையவை?!? Super!

    ReplyDelete